நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் ஜூலை 2ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வௌயிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலுவதன் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  

இதையும் படிக்க:"இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார்" முதலமைச்சர் பதில் கடிதம்!