இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும்...110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும்...110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இளையபெருமாள் தொண்டை சிறப்பிக்கும் வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இன்றைய சட்டப்பேரவையின் நிகழ்வின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்.  அப்போது பேசிய அவர், ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் ஒளி விளக்காய் விளங்கிய இளையபெருமாள் நூற்றாண்டை போற்றும் வகையில் விதி 110 கீழ் அறிவிப்புகளை வெளியிடுவதில் பெருமை அடைவதாக குறிப்பிட்டார்.

இதையும் படிக்க : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவு...ஈபிஎஸ், சசிகலா இரங்கல்!

’தீண்டாமையை ஒழிக்க சாதி அமைப்பின் ஆணிவேரை வெட்டியாக வேண்டும், அதற்கு சாதிய அமைப்பின் பிடிப்பை உடைத்தாக வேண்டும்' என்ற பெரியவர் இளையபெருமாள் வழியில் சுயமரியாதைச் சம தர்ம சமூகத்தை அமைப்போம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.