குருமாவில் கரப்பான் பூச்சி; மயிலாடுதுறையில் அதிர்ச்சி...!

குருமாவில் கரப்பான் பூச்சி;   மயிலாடுதுறையில் அதிர்ச்சி...!

மயிலாடுதுறை பட்டமங்கல தெருவில் பிரபல சைவ உணவகம் உள்ளது. மயிலாடுதுறையில் சைவ உணவகங்களில் காளியாகுடி ஹோட்டல் என்ற பெயர் வெகு பிரபலம்.    இந்த ஹோட்டலில் சங்கரன்பந்தலை சேர்ந்த வழக்கறிஞர் பூபாலன்(36), கலியமூர்த்தி(58), ஆகிய இருவரும்  ஹோட்டலுக்கு சென்று சோலா பூரி உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளனர். 

அப்போது பூபாலன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பூரி  குருமாவில் கரப்பான் பூச்சி ஒன்று சுருங்கி வெந்து பொரிந்து கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார். பூச்சி கிடந்ததை பார்த்த கலியமூர்த்தியும் வாந்தி எடுத்துள்ளார். தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்களிடம் தெரியப்படுத்தியும் எந்த ஆறுதலும் சொல்லாமல் பதட்டப்படாமல் இருந்துள்ளனர். 

இதையும் படிக்க    } ஆண் வேடமணிந்து மாமியாரை தாக்கிய மருமகள் கைது...!

இச்சம்பவம் தொடர்பாக உணவருந்திய இருவரும் வாக்குவாதம் செய்த போது நாங்கள் ஊழியர்கள் தான் என்ன செய்ய முடியும் என்று அலட்சியமாக தெரிவித்துள்ளனர். இருவரும்  சாப்பிட்ட உணவிற்கு  ரூபாய் பணம் செலுத்தி பில்லை பெற்று கொண்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். 

 இருவருக்கும் இசிஜி உள்ளிட்ட உடனடி பரிசோதனைகள் செய்யப்பட்டு இரண்டு மணி நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். உணவில் கரப்பான் பூச்சி வெந்து கிடந்தது தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இருவரும் வீடியோ பதிவுடன் புகார் அளித்துள்ளனர். 

பின்னர், உடனடியாக மாவட்ட நிர்வாகம் உணவு பாதுகாப்பு துறை மூலம் பிரபல தனியார் ஹோட்டலில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பிரபலமான ஹோட்டலில் இப்படி முறையற்ற வகையில், உணவால் பூச்சி இருந்த சம்பவம் வாடிக்கையாளர்களையும், அப்பகுதி மக்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.  

இதையும் படிக்க    } ஃபர்ஹானா இஸ்லாமிர்யர்களுக்கு எதிரான படம் இல்லை!!!!