மருந்து நிறுவனத்தில் நடைபெற்ற சோதனை நிறைவு...!

சென்னையில் மருந்து மற்றும் ரசாயன நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை நிறைவு பெற்றது.

கன்வர்லால் குழுமத்திற்கு சொந்தமான மருந்து மற்றும் ரசாயண நிறுவனங்களில்  வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக வந்த புகாரையடுத்து, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள் உள்பட இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 4 நாட்களாக வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் முடிவில் ஒரு கோடி ரூபாய் ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.