தொடர் வேலை நிறுத்த போராட்டம்...கேள்விக்குறியாகிய வாழ்வாதாரம்!

தொடர் வேலை நிறுத்த போராட்டம்...கேள்விக்குறியாகிய வாழ்வாதாரம்!

தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து, ராமேஸ்வரத்தில் விசைப் படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள்:

எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நிகழ்வுகள் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 650க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

இதையும் படிக்க: https://malaimurasu.com/posts/entertainment/It-is-reported-that-actor-Syan-Vikram-will-make-an-entry-in-Kannada-too

கைது செய்த இலங்கை கடற்படையினர்:

அப்போது, அவர்கள் அனைவரும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த இலங்கை கடற்ப்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, ஒரு படகில் இருந்த 6 மீனவர்களை கைது செய்து, தலைமன்னாருக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மன்னார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். 

வேலை நிறுத்த போராட்டம்:

இலங்கை கடற்படையின் இந்த செயலை கண்டித்து, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள், ராமேஸ்வரம் துறைமுகத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.