தெருவில் கிடந்த ரூ.1 லட்சத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்..!

தெருவில் கிடந்த ரூ.1 லட்சத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்..!

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் தெருவில் கிடந்த 1 லட்ச ரூபாயை காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்களை ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டினார்.

தனசேகரன், சூர்யகுமார் ஆகியோர் சரஸ்வதி நகரில் சென்ற போது, நாய்கள் கடித்துக்கொண்டிருந்த பையின் அருகே பணம் சிதறிக் கிடந்ததை பார்த்தனர். தொடர்ந்து அதை சோதித்ததில் பணம் இருப்பதைக் கண்ட இருவரும் அதனை போலீசாரிடம் ஒப்படைத்ததில் 1 லட்ச ரூபாய் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரும் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதே பகுதியில் தனது ரியல் எஸ்டேட் பணத்தை தொலைத்ததாக சசிகுமார் என்பவர் புகாரளித்தார். விசாரணையில் அவரது பணம் என தெரிய வந்ததை அடுத்து, இளைஞர்கள் அளித்த பணம் சகிகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.