மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்..!

மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்..!

கள்ளக்குறிச்சி பள்ளியில், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை நாளை மதியம் 12  மணிக்குள் பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மாணவியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

மாணவி மரணம்:

கள்ளக்குறிச்சி கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13 ஆம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டு மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் மிகப்பெரிய கலவரமாக மாறியது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மறுபிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்து நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டார்.

மாணவியின் உடலை பெற்றோர் வாங்கவில்லை:

மாணவியின் உடல் நீதிமன்ற உத்தரவுப்படி மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. எனினும் உடலை வாங்க பெற்றோர் வராததால் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவி உயிரிழந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகின்ற நிலையில், இதுவரை மாணவியின் உடலை வாங்க பெற்றோர் முன்வரவில்லை. இதையடுத்து மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு உத்தரவிடக்கோரி காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

காவல்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணை:

காவல்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மறுஉடல்கூராய்வு பரிசோதனையில் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கவில்லை என தடயவியல் நிபுணர் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதனைத்தொடர்ந்து தகுதியான மருத்துவர்களை கொண்டு தான் பிரேத பரிசோதனை நடைபெற்றதாக கூறிய நீதிபதி, நீதிமன்றம் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? என பெற்றோர் தரப்புக்கு கேள்வி எழுப்பினார். 
 
மேலும், 10 நாட்களுக்கு மேலாக இறந்த மாணவியின் உடலை  வாங்காமல் வைத்துள்ளீர்களே என மாணவியின் தரப்பு வழக்கறிஞரிடம் அதிருப்தியை தெரிவித்த நீதிபதி, மாணவியின் உடலை வைத்து அரசிடம் பந்தயம் கட்டுகிறீர்களா என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் இந்த விவகாரத்தில் தான் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறப்போவதில்லை என நீதிபதி  திட்டவட்டமாக குறிப்பிட்டார். 

ஜிப்மர் மருத்துமனை ஆய்வு செய்ய உத்தரவு:

தொடர்ந்து, மாணவியின் பிரேத பரிசோதனையின் அறிக்கை, வீடியோவை புதுச்சேரி  ஜிப்மர் மருத்துமனையில் 3 மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதி, நாளை மதியம் 12 மணிக்குள் பெற்றோர் உடலை வாங்காவிட்டால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரித்தார். அத்துடன் மாணவியின்  இறுதி சடங்கை அமைதியாக நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.

வேதனை தெரிவித்த நீதிபதி

முன்னதாக மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் வெடித்த கலவரத்தால் 4,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, வன்முறையில் பாதித்த மாணவர்களை பற்றி எவரும் பேசவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

பெற்றோர் சம்மதம்: 

மாணவியின் உடலை நாளை மதியம் 12 மணிக்குள் பெற்றோர் வாங்காவிட்டால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என நீதிபதி எச்சரிக்கை விட்டதையடுத்து, மாணவியின் உடலை நாளை பெற்றுக் கொள்வதாக, மாணவியின் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்படி, நாளை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், காலை 11 மணிக்குள் மாணவியின்  இறுதி சடங்கை முடிக்க வேண்டும் எனவும், நீதிபதி உத்தரவிட்டார். 


2024 ஆம் ஆண்டிற்கான  ரோட்டரி மெட்ராஸ் சவுத் வெஸ்ட் "Chariot Awards" விழாவில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் ததார் பங்கேற்று விருதுகள் வழங்கினார்

ஒவ்வோராண்டும் ரோட்டரி மெட்ராஸ் சவுத் வெஸ்ட்,  வாழ்நாள் தொழிற்துறை சாதனையாளர்,  கௌரவம், கலை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில்  "Chariot Awards" வழங்கி சிறப்பித்தது வருகிறது. 

சென்னை எழும்பூரில் உள்ள ரேடிசன் ப்ளூ நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விருது விழாவில், இந்த ஆண்டிற்கான 5 விருதுகள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் ததார் முன்னிலையில்  வழங்கப்பட்டன.

அந்த வகையில் மெட்ராஸ் டிஸ்லெக்சியா சங்கத்தின் தலைவர் டி.சந்திரசேகருக்கு கௌரவத்திற்கான  Chariot Award வழங்கப்பட்டது.  

வொகேஷனல் எக்ஸலன்ஸ் விருது விஜய் கார்மென்ட்ஸின் நிர்வாக இயக்குநர், ரொட்டேரியன் டி.விஜயகோபால் ரெட்டிக்கும்,   வாழ்நாள் தொழிற்துறை சாதனையாளர் விருது சங்கர நேத்ராலயா போர்டு ஆஃப் கவர்னர் மருத்துவர்.  லிங்கம் கோபாலுக்கும் வழங்கப்பட்டது. 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஏஸ் ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற 
 அவிக்ஷித் விஜய் விஸ்வநாத்திற்கு விளையாட்டிற்கான  விருதும்,  கர்நாடக பாடகி,  ஸ்ரீவித்யா வாசுதேவனுக்கு கலைக்கான  "Chariot Awards" வழங்கப்பட்டன. 

விருது பெற்ற ஒவ்வொருவரும்  தங்கள் எண்ணங்களையும், வாழ்நாள் பயணத்தையும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்

இந்த  "Chariot Awards" நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினர்களாக ரொட்டேரியன் சுரேஷ் ஜெயின், கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ரொட்டேரியன்கள் மஞ்சு குல்கர்னி, மகேஸ்வரன், ஹரிஷ் மகாதேவன், குல்தீப் சேத்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விருது பெற்றபின் பேட்டியளித்த ஏஸ் ஸ்கேட்டிங் வீரர், அவிக்ஷித் விஜய், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற போது சீனாவில் இந்திய தேசிய கீதம் ஒலித்தது தன் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு என்றார். தற்போது தமிழ்நாட்டில் ஸ்கேட்டிங் போட்டிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதாகவும் அதனை இன்னும் மேம்படுத்தி தர வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்த அவர், இந்த சின்ன வயதில் ரோட்டரி மெட்ராஸ் சௌத் வெஸ்ட் சேரியட் விருது பெற்றதற்கு தான் கடன்பட்டுள்ளதாகவும் நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்

வேளச்சேரியில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பள்ளத்தில் விழுந்த ஜெயசீலனின் உடலை உறவினர்கள் வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோன்றிய ராட்சத பள்ளம், மிக்ஜாம் புயலால் சரிந்து விழுந்தது. இதில் சிக்கிக்கொண்ட இரண்டு நபர்களை நான்கு நாட்களுக்கு பின்பு நேற்றைய தினம் மீட்டனர். அதில் நரேஷ் என்பவரின் உடல் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிக்க : தனிநீதிபதி கருத்துக்கு எதிராக அமைச்சர் சேகர்பாபு புகார் மனு!

அதேபோல், நேற்று மதியம் ஜெயசீலன் என்பவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜெயசீலனின் உறவினர்கள் கையொப்பமிட்டால் மட்டுமே பிரேத பரிசோதனை நடைபெறும். ஆனால், உயிரிழந்த ஜெயசீலனின் உடலை வாங்குவதற்கு உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், குறிப்பாக  உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சனாதன தர்மம் எதிர்ப்பு மாநாடு குறித்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது, சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். 

இதையும் படிக்க : கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

இந்த நிலையில், சனாதன தர்மம் எதிர்ப்பு மாநாடு குறித்து தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் சேகர் பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், உச்சநீதிமன்ற வழிமுறைகளை தனிநீதிபதி பின்பற்றப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் களமிறங்கினால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகளில் அண்ணாமலை ஆய்வு மேற்கொண்டார். 

இதையும் படிக்க : வெள்ளம் வடிந்த நிலையில், முழுவீச்சில் நடைபெறும் சீரமைப்பு பணிகள்!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தார். பல கோடி ரூபாய் இழப்பை எதிர்கொண்டுள்ள தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு, சென்னை வருகை தரும் மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறினார்.

அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு நாள் ஊதியம் என்பது புயல் நிவாரண நிதியில் ஒரு துளி மட்டுமே என்றுக்கூறிய அண்ணாமலை, அவர்கள் களத்தில் இறங்கி வந்தால் தான் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், கூலி வேலை செய்பவர்கள் கூட களத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். 

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் வடிந்த நிலையில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஒருசில இடங்களில் மின்சாரம் வழங்க கோரி பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

பெரும்பாக்கம் சேகரன் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கழுத்தளவு தண்ணீரில் சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது கழுத்தளவு தண்ணீரில் குழந்தையை முதல்நிலை காவலர் நாகராஜ் தோளில் சுமந்தவாறு பத்திரமாக மீட்டார். 

கொரட்டூர் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் வெள்ள நீர் வடிந்த நிலையில் 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் மின்னல் வேகத்தில் சுத்தம் செய்தனர். கொரட்டூர் காவல் நிலையம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் காவலர்கள் சாலையில் அமர்ந்து வேலை செய்யும் நிலைக்கு ஆளானதாக செய்தி வெளியிட்ட நிலையில், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் வந்து ஆய்வு செய்து மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

இதையும் படிக்க : மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று சென்னை வருகை...!

கொருக்குப்பேட்டை பரமேஸ்வரன் நகர் பகுதியில் தொடர்ந்து நான்காவது நாட்களாக மின்சாரம் இல்லாததால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சமரசம் எட்டப்படாததால் பொதுமக்களும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே உள்ள பெரியார் நகர்,  திருவேணிதெரு, கங்காதெரு, யமுனாதெரு உள்ளிட்ட பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பரிசலில் பயணிக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.  மேலும் அப்பகுதியில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.