தமிழ்நாட்டில் 2071 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 79 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் 2071 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 79ஆக பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து, 27 ஆயிரத்து 897ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை தொற்று காரணமாக மொத்தம் 33 ஆயிரத்து 724 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 2 ஆயிரத்து 743 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 220 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை 150 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.