தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு  குறைந்து வந்தது. இந்த நிலையில், நேற்று மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் நேற்றுமுன்தினத்தின் பாதிப்பு ஆயிரத்து 908 ஆக பதிவாகி இருந்த நிலையில், நேற்று ஆயிரத்து 949- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 67 ஆயிரத்து 401 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை இரண்டாயிரத்து 11 ஆக உள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பை கண்டறிய ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 635 மாதிரிகள் உள்ளன. சென்னையில் நேற்று மேலும் 189 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றுடன் சிகிச்சை உள்ளவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 117 ஆக உள்ளது.