குறைந்ததே தவிர முடியவில்லை.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரம்...

தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

குறைந்ததே தவிர முடியவில்லை.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரம்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் நேற்று 4 ஆயிரத்து 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 88 ஆயிரத்து 407 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், தமிழகத்தில் தற்போது 37 ஆயிரத்து 526 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் நான்காயிரத்து 952 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
 
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 18 ஆயிரத்து 8852 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 828 ஆக அதிகரித்துள்ளது. கோவையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 486 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பொறுத்தவரை 238 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.