தமிழகத்தில் அதிரடியாக குறையும் கொரோனா.. புதிதாக 37 பேருக்கு பாதிப்பு!!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 37 ஆக குறைந்துள்ளதென சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிரடியாக குறையும் கொரோனா.. புதிதாக 37 பேருக்கு பாதிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக  குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் நேற்றைய தினசரி கொரோனா பாதிப்பு 37 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 41 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் குறைந்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 612 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் நேற்று 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சென்னையில் நேற்று முன்தினம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று ஒரே நாளில் 66 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 141 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் ஒருவாரமாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால், கொரோனாவால் தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 ஆக நீடிக்கிறது. மாநிலம் முழுவதும் 475 பேர் சிகிச்சையில் உள்ளனர்.