தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி....!!

தமிழகத்தில் மேலும் 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி....!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 610 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 602 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அரபு அமீரகத்தில் வந்த 6 பேர், கென்யா, கானா ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 610 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,735 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 6,629 பேர் கொரோனா பாதிப்பிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று 171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக கோவையில் 89 பேர்,சேலத்தில் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.