பள்ளி மாணவர்களுக்கு கொரோனா... 3 நாட்களுக்கு பள்ளிகள் மூடல்...

திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு அரசு பள்ளிகளில் உள்ள  மாணவ மாணவியருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா... 3 நாட்களுக்கு பள்ளிகள் மூடல்...

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மாநகர பகுதியில் உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் நான்கு மாணவிகளுக்கும் வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் என ஏழு மாணவர்களுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பள்ளிகள் மூன்று நாட்கள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் தற்போது வரை மாநகரப் பகுதிகளில் நெசவாளர் காலனி மேல்நிலைப்பள்ளி சின்னசாமி அம்மாள் மேல்நிலைப்பள்ளி வீரபாண்டி மேல்நிலைப்பள்ளி மற்றும் மாவட்டத்தில் சேவூர், வெள்ளக்கோவில், பொங்கலூர், பெதப்பம்பட்டி, மூலனூர் என அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பையிலும் 10ம் வகுப்பு 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்கள் என 44மாணவ மாணவிகள் மற்றும் 6 ஆசிரியர்கள் என் 50 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.