தமிழகத்தில் இன்று புதிதாக 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று புதிதாக 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 76 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரேநாளில் ஆயிரத்து 457 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 24 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 14 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 35 ஆயிரத்து 768ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு 16 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 164 பேரும், கோவையில் 137 பேரும், செங்கல்பட்டில் 101 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.