தமிழகத்தில் புதிதாக 1,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   

தமிழகத்தில் புதிதாக 1,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 512 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்து 14ஆயிரத்து 872ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 22 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்து 921ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், ஆயிரத்து 725 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25 லட்சத்து 63ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 189 பேருக்கும், கோவையில் புதிதாக 173 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.