போலியோவை போல் கொரோனா ஒழிக்கப்பட்ட நோயல்ல- தடுப்பூசி போடுங்க...

போலியோவை போல் கொரோனா ஒழிக்கப்பட்ட நோயல்ல என்பதை உணர்ந்து மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை செய்லாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

போலியோவை போல் கொரோனா ஒழிக்கப்பட்ட நோயல்ல- தடுப்பூசி போடுங்க...

போலியோவை போல் கொரோனா ஒழிக்கப்பட்ட நோயல்ல என்பதை உணர்ந்து மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை செய்லாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறை செய்லாளர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  தமிழகத்தில் 20 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்  கொள்ளாதது சவாலாக உள்ளதாக கூறினார்.

மேலும் போலியோவை போல் கொரோனா ஒழிக்கப்பட்ட நோயல்ல என அறிவுறுத்திய ராதாகிருஷ்ணன், நோயின் தாக்கத்தை உணர்ந்து மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.

சேலம், திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறிய அவர், இந்த ஆண்டு டெங்குவால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.