திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி  குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி எச்.புதுப்பட்டியில் அ.தி.மு.க. கொடியேற்று விழா மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினா் கே.பி.அன்பழகன்  தலைமையில் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து எம்.ஜி. ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னா் பேசிய அவா், தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு காலத்தில் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எந்தவிதமான புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தான் தற்போது முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து கொண்டிருக்கிறார்  என குற்றம் சாட்டினா்,