கர்நாடக தேர்தல் குறித்து செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் - ஈபிஎஸ்

கர்நாடக தேர்தல் குறித்து செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் - ஈபிஎஸ்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

இதையும் படிக்க : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசார் அனுமதி...!

தொடர்ந்து பேசிய அவர், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என கூறினார். அப்போது, திமுகவினரின் ஊழல் பட்டியல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அதுகுறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.