போதை பொருளுக்கு எதிராக பெண்களிடம் பிரச்சாரம் செய்த காவல்துறை துணை கண்காணிப்பாளர்..!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கிராமங்கள் தோறும் போதை பொருளுக்கு எதிராக, பெண்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார் காவல்துறை துணை கண்காணிப்பாளர்...

போதை பொருளுக்கு எதிராக பெண்களிடம் பிரச்சாரம் செய்த காவல்துறை துணை கண்காணிப்பாளர்..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் மகாலட்சுமி. இவர் குமாரபாளையம் சுற்றியுள்ள சாணார்பாளையம், குப்பாண்டபாளையம், பூலக்காடு, தட்டாங்குட்டை மற்றும் நல்லாம்பாளையம், வீரப்பம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் நேரடியாக சென்று பெண்களை சந்தித்து போதைக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். 

மேலும் பெண்களை ஒன்றாக திரட்டி அவர்களிடம் போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கம் அளிப்பதுடன், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் கள்ளத்தனமாக மதுபானங்கள், கஞ்சா மற்றும் பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பது குறித்த தகவல்கள் கிடைத்தாலும் காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும்,  கிராம பகுதிகளில் உள்ள வாய்க்கால் கரையோரங்களில் இளைஞர்கள் அமர்ந்து பாதைக்கு இடையூறாக மது அருந்தினாலும், மது அருந்திவிட்டு சாலையில் செல்பவர்களுக்கு  இடையூறு செய்பவர்கள் குறித்தும் காவல் துறைக்கு தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது மக்களிடம் உறுதியளித்தார்.