10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொது தேர்வு நடத்தப்படும் : அன்பில் மகேஷ் திட்டவட்டம்...

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொது தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொது தேர்வு நடத்தப்படும் : அன்பில் மகேஷ் திட்டவட்டம்...

சென்னை திருவல்லிக்கேணியில்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், திமுக எம்எல்ஏ உதயநிதி ஆகியோர்  இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை  துவக்கி வைத்தனர்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ்,இல்லம் தேடி கல்வியின் இரண்டாம் கட்டம் இன்று துவங்கப்பட்டதாகவும்,4 லட்சத்து 93 ஆயிரம் தன்னார்வலர்கள் இதற்காக பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

மேலும்  15 முதல் 18 வயது உள்ளோருக்கு தடுப்பூசி தற்போது  மிகவும் அவசியம் என்றும்  மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதால், 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொது தேர்வு நடத்தப்படும் எனறும் அமைச்சர்  திட்டவட்டமாக தெரிவித்தார்.