சசிகலாவுடன் தொடர்பு வைத்திருந்தால் ஒழுங்கு நடவடிக்கை... அதிமுக கூட்டத்தில் தீர்மானம்..!

சசிகலாவுடன் தொடர்பு வைத்திருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்  என்று பெரம்பலூரில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சசிகலாவுடன் தொடர்பு வைத்திருந்தால் ஒழுங்கு நடவடிக்கை... அதிமுக கூட்டத்தில் தீர்மானம்..!
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா சிலகாலங்கள் அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருந்தார். நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு, சசிகலா அதிமுக நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேசி வரும் ஆடியோக்கள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. அதிமுகவை தீவிர அரசியலுக்கு வருவேன், மீட்டெடுப்போம் போன்ற வாக்குறுதிகளை நிர்வாகிகளிடம் தெரிவித்து வருகிறார் சசிகலா.
 
சசிகலாவுடன் தொடர்பு கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில்  சமீபத்தில் அதிமுக முக்கிய நிர்வாகி புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.  
 
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் சசிகலாவுடன் தொடர்பு வைத்திருந்தாலோ அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டாலோ தலைமை கழகத்தின் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.