பாரம்பரியமாக வாழ்ந்து வருவதால்;பொதுமக்கள் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும் - டி.ஆர்.பாலு!

பாரம்பரியமாக வாழ்ந்து வருவதால்;பொதுமக்கள் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும் - டி.ஆர்.பாலு!

அரசு திட்டங்கள் செயல்படுத்தும் நிலையில் அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாக பின்பற்றப்படும் என டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.

பருவமழையை எதிர்கொள்ளும் முன்னேற்பாடு பணிகள்:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அதன் தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி. ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர்,  சி வி எம் பி எழிலரசன் ,  கு. செல்வப் பெருந்தகை மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் வரும் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தொடர்ந்து முன்னேற்பாடு பணிகளை செயல்படுத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

செய்தியாளர்கள் சந்திப்பு:

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஆர். பாலு, சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும் புதிய கட்டமைப்பு தேவைப்பட்டதால் பரந்தூரில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்படுகிறது. இதில் முக்கியமாக கருதப்படும் சாலை கட்டமைப்பு வசதி குறித்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு குறித்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/cover-story/Friday-Walk-Seeking-Justice

பொதுமக்கள் எதிர்ப்பு:

விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு என்பது இருக்கத்தான் செய்யும் எனவும், பாரம்பரியமாக வாழ்ந்து வருவதால் இப்பிரச்சனை நிலவுதாகவும்,  அதற்கு உரிய தீர்வு காணப்படும் எனவும் கூறினார்.

பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம்:

மேலும், பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட அனைத்து  அரசு திட்டங்களும் செயல்படுத்தும் நிலையில் அதற்கான முறையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றப்படும் எனவும் உறுதியளித்தார்.