சத்தம் போட்டு பேசக்கூடாது...! ஆசிரியரான சபாநாயகர்...!!

சத்தம் போட்டு பேசக்கூடாது...! ஆசிரியரான சபாநாயகர்...!!

இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சபாநாயகர் அப்பாவு பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனை அதிகம் சத்தம்  போட்டு பேசக்கூடாது என எச்சரித்துள்ளார். மேலும் ஓ.பி.எஸ். பேசும்போது சபாநாயகர் கனிவான ஆசிரியரா? கண்டிப்பான ஆசிரியரா? என சபாநாயகரை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார். 

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது சுகாதாரத்துறை தொடர்பான துணைக் கேள்விக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசினார். தொடர்ந்து வாய்ப்பு மறுத்தபோதும், எழுந்து நின்று சத்தமாக பேசினார். அதற்கு சபாநாயகர் அப்பாவு, இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனுக்கு 4 துணைக் கேள்விகளுக்கு  அனுமதி அளித்திருப்பதாகவும், மற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார். 

மேலும், சட்டப்பேரவையில் இது போன்று அதிக சத்தம் போட்டு பேசக் கூடாது என்றும் எச்சரித்தார். இடையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் கனிவான ஆசிரியரா? கண்டிப்பான ஆசிரியரா என கேட்டதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.