"குடிநீர் அபிவிருத்தி திட்டம் டிசம்பாில் செயல்பாட்டுக்கு வரும்" - உதயநிதி ஸ்டாலின்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொடங்கப்பட்ட குடிநீர் அபிவிருத்தி திட்டம் டிசம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொிவித்துள்ளாா். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  கலந்து கொண்டார். 

இதையும் படிக்க : ஆம்னி பேருந்து கட்டணம் 5% குறைக்கப்படுவதாக அமைச்சர் அறிவிப்பு...!

பின்னர் செய்தியாளா்களை சந்தித்து பேசிய அவா், நாகர்கோவிலில் 296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட குடிநீர் அபிவிருத்தி திட்டம் வரும் டிசம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என தொிவித்துள்ளாா்.

முன்னதாக அவா் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டாா்.