யாருப்பா நீ...போலீசையே படாதபாடு படுத்துற..சிகிச்சை அளிக்க விடாமல் அலப்பறை செய்த போதை ஆசாமி!

யாருப்பா நீ...போலீசையே படாதபாடு படுத்துற..சிகிச்சை அளிக்க விடாமல் அலப்பறை செய்த போதை ஆசாமி!

சிவங்கை அருகே காயத்துடன் அரசு மருத்துவமனைக்கு வந்த போதை ஆசாமி, மருத்துவம் பார்க்க விடாமல் அலப்பறை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி சுங்கச் சாவடி அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் கீழே விழுந்து காயமடைந்தார்.

அதனை தொடர்ந்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அந்த வாலிபருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முற்பட்டுள்ளனர். ஆனால் போதை தலைக்கேறிய அந்த வாலிபர் சிகிச்சை அளிக்க விடாமல் அவர்களுடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டர்.

தகவலறிந்து வந்த போலீசாரையும் படாதபாடு படுத்திய அந்த வாலிபருக்கு ஒருவழியாக சிகிச்சை அளித்து அனுப்பி வைக்கப்பட்டார்.