முதலமைச்சர் இன்று மாலை பங்கேற்கும் நிகழ்வுகள்...!!

முதலமைச்சர் இன்று மாலை பங்கேற்கும் நிகழ்வுகள்...!!

சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இன்று  மாலை 04.45 மணி முதல் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

(1) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் வீனஸ் நகரில் ரூபாய் 110 கோடியே 92 இலட்சம் மதிப்பீட்டில் , 230/33 KV புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

(2) கந்தசாமி சாலை வெங்கடேசன் சாலை சந்திப்பில் நடைபெறும் நிகழ்ச்சியில், கார்த்திகேயன் சாலையில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டிலும், வெங்கடேசன் சாலையில் ரூ99 இலட்சம் மதிப்பீட்டிலும், மாதவரம் நெடுஞ்சாலையில் ரூ.1.94 கோடி மதிபீட்டிலும், ராஜா தெருவில் ரூ.39.91 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆகிய பகுதிகளில் பழைய குடிநீர் குழாய்களை மாற்றி, புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

(3) ஜி.கே.எம். காலனி 33ஆவது தெருவில், புதிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் கட்டும் பணி ரூ.35 இலட்சம் மதிப்பீட்டிலும், ஜம்புலிங்கம் பிரதான சாலை 33ஆவது தெரு சந்திப்பில் 16-ம் நாள் காரியக் கூடத்தில் கூடுதலாக உணவு அருந்தும் கூடம் கட்டும் பணி ரூ.20 இலட்சம் மதிப்பீட்டிலும், ஜம்புலிங்கம் பிரதான சாலையில் அமைந்துள்ள மின்சார (Electric) மயான பூமியை, திரவ பெட்ரோலிய வாயுவாக (LPG) மாற்றும் பணி ரூ.33. 60 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

(4) பெருநகர சென்னை மாநகராட்சி பாலங்கள் துறை சார்பில் ரூ.61.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஐ.சி.எப். மற்றும் கொளத்தூர் பகுதியை இணைக்கும் புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்.

இதையும் படிக்க:  திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது... முதலமைச்சர்!!