சென்னையில் இன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு முகாம்.. பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம்!!

சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் இன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

சென்னையில் இன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு முகாம்.. பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம்!!

தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளை பெறுவதற்காகவும், ஏற்கனவே இருக்கும் குடும்ப அட்டையில் திருத்தம் செய்வதற்காகவும் பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் குடும்ப அட்டையில் மாற்றங்கள் மேற்கொள்ள தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் மக்கள் குறைதீர் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னையில், அனைத்து மண்டலங்களிலும் இன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் சேவை நடைபெறும். நியாயவிலை கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரம் சான்று வழங்கப்படும்.

மேலும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியும் நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே, சிறப்பு முகாமை பயன்படுத்தி குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் செய்துகொள்ள வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.