குடும்ப தகராறு- மகன், மகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை....

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குடும்ப தகராறு காரணமாக 2 பிள்ளைகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குடும்ப தகராறு- மகன், மகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை....

நிலக்கோட்டை அருகேயுள்ள கரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சந்திரபோஸ் - முருகேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகனும், சௌந்தர்யா என்ற மகளும் இருந்தனர். கணவர் சந்திரபோஸ் காய்கறி வியாபாரம் செய்வதற்காக சென்ற நிலையில், வீட்டில் இருந்த முருகேஸ்வரி தனது இரு பிள்ளைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மாமியாருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் மனமுடைந்து குழந்தைகளுடன்  முருகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.