5.5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள்... புனேவில் இருந்து சென்னை வந்தது...
5.5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 46 பாா்சல்களில் புனேவிலிருந்து விமானத்தில் சென்னை வந்தது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கொரோனா வைரஸ் 3 வது அலை தமிழகத்தில் பராவாமல் தடுக்க அரசு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு அடுத்த அக்டோபா் மாதம் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதோடு அனைவரும் முகக்கவசங்கள் அணிவது,சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை சுத்தப்படுத்துவது ஆகிய பாதுகாப்பு விதிமுறைகளும் முழுமையாக அமுல்படுத்தப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயமாக 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது. மேலும் வாரம் தோறும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்களையும் நடத்துகிறது. இதனால் பொதுமக்களும் ஆா்வமாக வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொள்கின்றனா்.
இதையடுத்து தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. எனவே மத்திய அரசிடம் தமிழ்நாடு முதலமைச்சா் வாரம் தோறும் 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாா். இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை தமிழ்நாட்டிற்கு இன்று மேலும் 5.5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கிலிருந்து விடுவித்தது.அந்த 5.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் அடங்கிய 46 பாா்சல்கள் புனேவிலிருந்து சென்னை வரும் இண்டிகோ விமானத்தில் சென்னை விமானநிலையம் வந்து சோ்ந்தன.
சென்னை விமானநிலைய லோடா்கள் அந்த தடுப்பூசி பாா்சல்களை பாதுகாப்பாக விமானத்திலிருந்து இறக்கி, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அவா்கள் அந்த தடுப்பூசி பாா்சல்கள குளிா்சாதன வாகனத்தில் ஏற்றி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா்.