முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜர்..!

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜர்..!

மாநிலங்கவை அதிமுக உறுப்பினர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நாட்டார்மங்கலத்தில் கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம்  மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன் என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அவ்வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சி. வி சண்முகம் ஆஜரானார். 

இதையும் படிக்க   | காவிரி விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாடு... சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் விமர்சனம்!!