தீபாவளி மறுநாள் வெள்ளிக்கிழமை பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு....

தீபாவளிக்கு மறுநாளான வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தீபாவளி மறுநாள்  வெள்ளிக்கிழமை  பொது விடுமுறை :  தமிழக அரசு அறிவிப்பு....

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை களைக்கட்ட தொடங்கியுள்ளது. பல்வேறு தரப்பினரும் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடும் வகையில் சொந்த ஊர் புறப்பட்டு வருகின்றனர். இதனிடையே   பண்டிகையை  பணியாளர்கள்  சொந்த ஊர் சென்று, மகிழ்ச்சியாக கொண்டாட ஏதுவாக  தீபாவளிக்கு மறுநாளான வெள்ளிக்கிழமை விடுப்பு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை பரிசீலித்த தமிழக அரசு நவம்பர் 5ம் தேதி விடுமுறை அறிவித்து  அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி அன்றைய தினம்  அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு  உள்ளூர் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அன்றைய விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகிற 20ம் தேதி பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.