இன்று முதல் தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில்...!!!

இன்று முதல் தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில்...!!!

தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.  அதற்கேற்ப இன்று நள்ளிரவு 12 மணி முதல், சுங்கக் கட்டணத்தை 5 – 10 சதவீதம் வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.  தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில், 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.  அதன்படி வாகனங்கள் ஒரு முறை சென்று வர 47 ரூபாய் முதல் 301 ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதில் இலகுரக வாகனங்கள் ஒருமுறை சென்று திரும்ப முன்னர் 45 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இன்றுமுதல் 2 ரூபாய் உயர்த்தப்பட்டு 47 ரூபாய் வசூலிக்கப்படவுள்ளது.  அதேபோல் சரக்கு வாகனம் மற்றும் பேருந்து ஆகிய வாகனங்களுக்கு முந்தைய கட்டணத்தை விட 22 ரூபாய் உயர்த்தி, 157 ரூபாயாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  வணிக வாகனம் ஒருமுறை சென்று வர முந்தைய கட்டணம் 172 ரூபாயாக உயர்த்தப்படவுள்ளது.  அதிகபட்சமாக ஏழு மற்றும் அதிக அச்சுகள் கொண்ட பெரிய வாகனங்களின் சுங்க கட்டணம் 270 ரூபாயிலிருந்து 301 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

சென்னையை பொறுத்தமட்டில் புறநகர் பகுதியில் உள்ள பரணூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.  இதன்மூலம் சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு கார் போன்ற வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும்போது கூடுதல் செலவு ஏற்படும்.  இந்த சுங்கக் கட்டண உயர்வால், கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க:  தமிழ்நாட்டில் மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!!