தீபாவளி முடிந்த பிறகு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் - அன்பில் மகேஷ்

தீபாவளி முடிந்த பிறகு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். 

இதையும் படிக்க : சென்னையில் அதிகம் பனிமூட்டம் ஏன் ? விளக்கமளித்த தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்!

அப்போது பேசியவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தர்களுக்கு 40 க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், பருவ மழை முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தீபாவளி முடிந்தவுடன் பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.