காதலன் வீட்டில் தகராறு செய்த காதலி...சமரசம் பேச வந்த காவலரை தாக்கிய மணப்பெண்!

காதலன் வீட்டில் தகராறு செய்த காதலி...சமரசம் பேச வந்த காவலரை தாக்கிய மணப்பெண்!

திருமணம் நின்ற விரக்தியில் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று பெண்  தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் சமரச பேச்சு வார்த்தை நடத்த வந்த காவலரின் கையை கடித்து, சட்டையும் கிழித்த பெண் கைது செய்யப்பட்டார்.

திருமணம் நிச்சயம்:

வடசென்னை திருவொற்றியூர் எஸ் பி கோவில் பகுதியில் வசித்து வருபவர் ரேவேந்திரன். தனியார் வங்கி ஊழியரான இவரும், புதுவண்ணாரப்பேட்டை பூணடிதங்கமாள் தெரு பகுதியில் வசித்துவரும் செல்வி என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பெற்றோர்கள் முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

திருமணத்தை நிறுத்தம்:

ஆனால், திருமணத்திற்கு முன்பே மணமகள் செல்வி  ஐந்து சவரன் நகை,  இரு சக்கர வாகனம்  மற்றும் ஒரு லட்ச ருபாய் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால்  மணமகன் வீட்டார் திருமண முடிவை ரத்து செய்தனர்  

இதையும் படிக்க: என்னது... ஓபிஎஸ் அணியில் இணைகிறேனா? கொந்தளித்த பிரபலம்...!

காவலரின் சட்டையை கிழித்த பெண்:

இதனால் விரக்தியடைந்த செல்வி காதலன் வீட்டில் இல்லாத சமயத்தில் சென்று மாமனார் மாமியாரை  தாக்க முற்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் காவல் நிலைய தலைமை காவலர் சரவணன் பெண்ணிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் காவலரை செல்வி  வலது கையை பிடித்து கடித்ததுடன், சட்டையை பிடித்தும் கிழித்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவே திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ருக்மணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளார்.