சிறந்த குறும்படங்களுக்கும் அரசு விருது வழங்க பரிசீலிக்கப்படும் - அமைச்சர் பதில்!

சிறந்த குறும்படங்களுக்கும் அரசு விருது வழங்க பரிசீலிக்கப்படும் - அமைச்சர் பதில்!

சிறந்த குறும்படங்களுக்கு விருது வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திரைப்படக் கவிஞர்கள், கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் விருதுகள் குறித்து தகவல் தெரிவிக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினர்.

இதையும் படிக்க : அண்ணாமலை சொன்னால்... நான் அதற்கு பதில் அளிப்பேன் - ஓபிஎஸ்!

அதற்கு பதில் அளித்த செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், 2009 முதல் 2014 வரை வழங்கப்படாமல் இருந்த விருதுகள்,  கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி வழங்கப்பட்டதாக கூறினார்.  மேலும், 2015 ஆம் ஆண்டுக்கான விருது வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய உறுப்பினர் எழிலரசன், திரைப்பட கலைஞர்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுவது போல, பல்வேறு சமூக சிந்தனைகளை விதைத்து வரும் குறும்படங்களுக்கும் அரசு விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சாமிநாதன், எழிலரசன் வழங்கிய ஆலோசனைகளை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று குறும்படங்களுக்கு விருது வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.