காந்தியின் உருவப்படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர் மரியாதை...!

காந்தியின் உருவப்படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர் மரியாதை...!

காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி, அவரது உருவபடத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

காந்தியடிகளின் 76வது நினைவுநாள் :

தேச விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மகாத்மா காந்தியடிகளின் 76வது நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இணையத்தில் அவரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : அவர் ஒரு கம்யூனிஸ்ட்... அவருக்கு பயமே இல்லையாம்...!

மலர் தூவி மரியாதை :

இந்நிலையில் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்திடியகளின் உருவப்படத்திற்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

காந்தியும் உலக அமைதியும் :

இதையடுத்து காந்தியும் உலக அமைதியும் என்ற புகைப்பட கண்காட்சியை இருவரும் திறந்து வைத்து, ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டவாறே அனைத்தையும் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.