மார்ச் மாதம் வெளியாகிறது குரூப் 4 தேர்வு முடிவுகள்..!

மார்ச் மாதம் வெளியாகிறது குரூப் 4 தேர்வு முடிவுகள்..!

குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் டிஎன்பிஎஸ்சி கேட்டுக் கொண்டுள்ளது. மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய ஓ.எம். ஆர். விடைத் தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் மேல் உள்ளதால், பிழைகளை கணினி மூலம் அடையாளம் காண நேரடி அலுவலர் மூலம் உறுதி செய்ய அவகாசம் தேவை எனவும் டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டுள்ளது. ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வை 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.