தமிழகத்தில் 8 பேருக்கு மரபணு கொரோனா பாதிப்பு உறுதி - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் 8 பேருக்கு மரபணு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் 8 பேருக்கு மரபணு கொரோனா பாதிப்பு உறுதி  - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சற்று அதிகரித்து வருகிறது என்றார்.

வழக்கமான மரபணு பகுப்பாய்வுக்கு 139 மாதிரிகள் அனுப்பப்பட்டன என்றும்  இதில் 8  பேருக்கு BA5 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.4 பேருக்கு BA 4 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவை இரண்டுமே ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் எனவும் சுகாதாரத்தறை செயலர் விளக்கம் அளித்தார்.

மேலும்  அடுத்த அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக  மருத்துவ வல்லுனர்கள் கூறி வருவதால்  முன்னெச்சரிக்கையாக பொது இடங்களில் அனைவரும்  முக கவசம் அணிந்து கொள்வது நல்லது என்று ராதாகிருஷ்ணன் கூறினார். அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் ஒளிவு மறைவு இன்றி செயல்பட்டு வருகிறது என விளக்கம் அளித்தார்.