தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஈரோடு, கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, நீலகிரி, கோவை உள்ளிட்ட 10  மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இன்று நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.