இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு...

சென்னை மாதவரம் பகுதியில் போக்குவரத்து போலீசாரால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு...

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இருசக்கர வாகன ஓட்டிகளின் விபத்து சம்பவங்களை தடுக்கும் விதமாக ஹெல்மெட் அணிவதின் கட்டாயம் குறித்து விபத்தின்போது உயிரிழப்புகளை தடுக்கும் விதத்தில் ஹெல்மெட்டின் அவசியம் குறித்து மாதவரம் போக்குவரத்து ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் மாதவரம் ரவுண்டானா ஜங்ஷன் பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகளை சாலையில் நிற்கவைத்து ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள் இரண்டு நபர்கள் சென்றாலும் ஹெல்மட் கட்டாயமாக அணிந்து சென்றால் விபத்து ஏற்படுவதன் மூலம் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்றும் ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே உயிருக்கு பாதுகாப்பு என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர்.