மனநிலை பாதித்தவர் மீது கொலைவெறி தாக்குதல் : நடவடிக்கை எடுக்க உறவினர்கள் வலியுறுத்தல்!!
செங்கோட்டை அருகே மனநிலை பாதித்த இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல். குற்றவாளிகளை கைது செய்ய உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியைச் சேர்ந்தவர் முப்பிடாதி. 28 வயதான இவர் மனநிலை பாதிப்படைந்தவர். தாய் - தந்தை இறந்து விட்ட நிலையில் உறவினர்களின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி முதல் முப்பிடாதியை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரை உறவினர்கள் அக்கம் பக்கம் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மனநிலை பாதித்த முப்பிடாதி அருகே உள்ள ஒரு வீட்டில் இருப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது மர்ம நபர்களால் கடுமையாக கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்தது. முப்பிடாதியை உடனானடியாக அவரது உறவினர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருக்கின்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மனநிலை பாதித்த இளைஞர் முப்பிடாதி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்த கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.