மதுவால் நிகழ்ந்த விபரீதம்...மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவனும் தற்கொலை....

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே  குடிபோதைக்கு அடிமையான கணவனால் விரக்தியடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையடுத்து  துக்கம் தாளாமல் கணவனும் கழுத்தை அறுத்துக்கொண்டு  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுவால் நிகழ்ந்த விபரீதம்...மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவனும் தற்கொலை....

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள வைகுந்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. டிப்பர் லாரி உரிமையாளரும், ஓட்டுனருமான கார்த்திக்கிற்கும் அரியாம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 15 மாதங்களுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில்  கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட கார்த்திக் அடிக்கடி மது அருந்திவிட்டு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட  சென்று விடுவதாக கூறப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு இரவில் வீட்டிற்கு வராமலிருந்த கணவனை மனைவி கண்டித்ததால் இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தில் அவ்வப்போது சண்டைகள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கார்த்தி இரவு முழுவதும் வீடு திரும்பாமல் இன்று அதிகாலையிலேயே குடிபோதையில் வீட்டிற்கு வந்தபோது    மனைவி பிரியா இரவு எங்கு சென்றிருந்தீர்கள் என கேட்டுள்ளார்.

அப்போது கார்த்தி மது போதையில் தகாத வார்த்தைகளில் பேசியதால் மனமுடைந்த பிரியா படுக்கைறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வீட்டின் படுக்கையறையில் தூக்கில் தொங்கிய படி மனைவி சடலமாக இருப்பதை  கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டிற்க்கு வெளியே வந்தவர் அருகில் இருந்த மது பாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்துள்ளார்.  

இதில் இறப்பு ஏற்படாது என கருதிய கார்த்தி அருகிலிருந்த ஏரிக்கரையிலுள்ள மரத்தில் தனது லுங்கி வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். இத்தகவலறிந்த சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணவன் மனைவி இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குடி குடியை கெடுக்கும் என்பது போல கணவனின் குடிபோதையால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.