அதிமுக, திமுகவிற்கு ஓட்டுப் போட்டால் உங்களை சுடுகாட்டில் தான் போடுவார்கள்....சீமான்

அதிமுக, திமுகவிற்கு ஓட்டுப் போட்டால் உங்களை சுடுகாட்டில் போட்டுவிடுவார்கள், அப்போது  தான் என்னை தேடி வருவீர்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.

அதிமுக, திமுகவிற்கு ஓட்டுப் போட்டால் உங்களை சுடுகாட்டில் தான் போடுவார்கள்....சீமான்

செங்கல்பட்டு மாவட்டம்  சித்தாமூர் ஒன்றியம் அச்சரப்பாக்கம் ஒன்றியம் மதுராந்தகம் ஒன்றியங்களில் நடைபெறுகின்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய குழு மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சித்தாமூரில் சீமான் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் எந்த காலத்திலும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்றார்.

அதேபோன்று வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக திமுக பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தனித்து நிற்க தயாரா , நாங்கள் கடந்த சட்டசபை தேர்தலில் 30 லட்சம் வாக்குகள் பெற்றோம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் அது மூன்று கோடி வாக்குகளாக மாறும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,  நான் எப்போதுமே தனித்து தான் தேர்தலில் நிற்பேன், என் சொந்தங்களே நீங்கள் வாக்களித்தால் வாக்களியுங்கள் வாக்களிக்காமல் போங்கள் கடைசியில் என்னை தான் தேடி வருவீர்கள் என்றார். மேலும் திமுக ,அதிமுகவிற்கு ஓட்டு போட்டால் அவர்கள் உங்களை சுடுகாட்டில் போட்டுவிடுவார்கள் அப்போது தான் என்னைத் தேடி வருவீர்கள் என தெரிவித்தார்.