விஸ்வரூபம் எடுத்துள்ளது சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கு..!

ஈரோட்டில் சிறுமியின் கரு முட்டை சட்ட விரோதமாக விற்பனை செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விஸ்வரூபம் எடுத்துள்ளது சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கு..!

ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கருமுட்டை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச் சம்பவம் தமிழகத்தில் பெரும் விஸ்வரூபத்தை எடுத்துள்ள நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் 7 பேர் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இன்று வரை மருத்துவமனைக்கு வந்தவர்கள் விவரங்கள்  சேகரித்து முதற்கட்ட விசாரணையை துவங்கியுள்ளனர்.

இந்த கருத்தரித்து மையத்தில் எத்தனை கருத்தரிப்புகள் நடைபெற்று உள்ளது. அதற்காக  கருமுட்டைகள் எங்கெங்கு? யார் யாரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அதற்கான முறையான ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.