எங்கள் ஆட்சியில் முறைகேடு எங்கு நடந்தாலும்...அதற்கான பரிகாரத்தை துறை காணும்...!

எங்கள் ஆட்சியில் முறைகேடு எங்கு நடந்தாலும்...அதற்கான பரிகாரத்தை துறை காணும்...!

திமுக ஆட்சியில் தவறு முறைகேடு எங்கு நடந்தாலும், அதற்கான பரிகாரத்தை துறை காணும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார்.

இதையும் படிக்க : அரசு ஓட்டுநர்கள்..! 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை கட்டாயம்...!!

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம்,  சமயபுரம் கோவலில் முடி திருத்தம் செய்ய  கூடிய தொழிலாளர்கள் 4 பேர் பணி நிறுத்தம் செய்யப்பட்டு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், திமுக ஆட்சியில் தவறு, முறைகேடு எங்கு நடந்தாலும், அதற்கான பரிகாரத்தை துறை காணும் என்று விளக்கமளித்தார்.