பறிமுதல் செய்யப்பட்ட போலி மதுபாட்டில்... ரோடு ரோலர் வைத்து அழித்த போலீசார்...

போளூர் பகுதியில் போலி மதுபான பாட்டில்களை கலால் பிரிவினர் சாலை போடும் இயந்திரத்தை வைத்து அழித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போலி மதுபாட்டில்... ரோடு ரோலர் வைத்து அழித்த போலீசார்...

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்து கலால் அலுவலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்ட எரிசாராயம் கலந்த போலி 762 மது பாட்டில்களை மாவட்ட கலால் உதவி ஆணையர் உத்தரவின்படி போளூர் கலால் காவல் ஆய்வாளர் புனிதா தலைமையில், கோட்ட கலால் வருவாய் ஆய்வாளர் ரகுபதி மற்றும் கோட்ட கலால் அலுவலர் சுகுணா முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் கலந்த போலி மது பாட்டில்கள் மற்றும் வெளிமாநில மது பாட்டில்களை ஒதுக்குப்புறமான பகுதியில் தரையில் அடுக்கி வைத்து சாலை போட பயன்படும் உருளை இயந்திரம் கொண்டு அனைத்து பாடல்களையும் நசுக்கி அழித்தனர்.

பிறகு துப்புரவு பணியாளர்களை கொண்டு நசுக்கப்பட்ட கண்ணாடி பாட்டில்களின் கழிவுகள் மற்றும் கண்ணாடி துகள்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டது. உடன் போளூர் கலால் பிரிவு காவலர்கள் அனைவரும் இருந்தனர்