ஆட்சியராக பதவியேற்பு.... முதல் நாளே பரபரப்பு பேட்டி

தமிழக அரசின் உத்தரவுப்படி அறிவிக்கப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர்கள் இன்று பதவியேற்பு

ஆட்சியராக பதவியேற்பு.... முதல் நாளே பரபரப்பு பேட்டி

தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிக்கு வந்தது முதல், அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், நேற்று மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி புதிய மாவட்ட ஆட்சியர்கள் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் 24-வது மாவட்ட ஆட்சியராக டாக்டர் சந்திரகலா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்டத்தின் இரண்டாவது பெண் மாவட்ட ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று நாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் ஷ்ரேயா சிங் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். நாமக்கல் மாவட்டத்தின் 15வது ஆட்சியராக  ஷ்ரேயா சிங் இன்று பதவியேற்ற அவர் அளித்த பேட்டியில், 

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது.  எனவே மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் மாவட்டத்தில் ஒரு இறப்பு கூட நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான முயற்சிகள் இனிவரும் காலங்களில் எடுக்கப்படும் எனக் கூறினார்.