அதிகரிக்கும் வெயிலுக்கு மண்பானை விலை உயர்வு

அதிகரிக்கும் வெயிலுக்கு மண்பானை விலை உயர்வு

தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் பொதுமக்கள் அதிகளவில் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் சூட்டை தணிக்க சில்லென்ற குளிர் பானங்களை தேடி குடிக்க படையெடுத்துள்ளனர். அதுபோல் இளநீர், நுங்கு, பதநீர், தர்பூசணி, கம்பங்கூழ், எலுமிச்சை ஜூஸ் போன்ற குளிர்பானங்களை குடிக்க ஆரம்பித்துள்ளனர்.

மேலும் படிக்க | கிராமத்து மாணவிக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு!!

அதுபோன்று பாரம்பரிய முறையில் மண் பானை வைத்து குடிநீரைக் குடிக்கவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆண்டு வழக்கத்தைவிட கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதற்கு ஏற்ப நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனை சமாளிக்க அதிக அளவு நீர் பருக வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இதுகுறித்து மண்பாண்ட விற்பனையாளர்கள் கூறுகையில், “செயற்கை முறையில் நிறமூட்டி, குளிர்சாதனங்களில் வைத்து, விற்பனை செய்யும் பானங்கள் உடம்பில் பல்வேறு கோளாறுகள் ஏற்படுத்தும். அதற்கு மாற்றாக மண்பானை குடிநீர் அனைவருக்கும் உகந்ததாக இருக்கும். நவீன வரவுக்கு ஏற்ப பானைகளில் எளிதாக குடிநீர் பிடிக்க குழாய் பொருத்தியே விற்பனை செய்யப்படுகின்றன. 6 லிட்டர், 12 லிட்டர் அளவுகளில் தேவைக்கேற்ப கிடைக்கிறது. இதில் ஊற்றப்படும் தண்ணீர் 6 மணி நேரத்தில் குடிப்பதற்கு ஏற்ற குளுகுளு தன்மையை அடைகிறது" என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.