குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவியில் ஜுன், ஜுலை, ஆகஸ்ட் உள்ளிட்ட மாதங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்.

இந்நிலையில் தற்போது கோடை காலம் என்பதாலும் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளதாலும் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து குறைந்திருந்தது. தொடர்ந்து அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், குற்றாலத்தில் இரவு முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது.

இதனால் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தை நோக்கி படையெடுக்க தயாராகி வருகின்றனர். தென்மேற்குப் பருவமழை தொடரும் நிலையில், குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் முன்கூட்டியே தொடங்கும் நிலை உருவாகியுள்ளது.