செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் - மா.சுப்பிரமணியன் கோரிக்கை!

செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் - மா.சுப்பிரமணியன் கோரிக்கை!

செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் இவ்வளவு காலம் பொறுமையாக பணி புரிந்த செவிலியர்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செவிலியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த  அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். சென்னையில் செவிலியர்கள்  சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில் சுப்பிரமணியன் இந்த தகவலை தெரிவித்திருக்கிறார்.